கோத்தாவின் உதவியை நாடிய, ஜம்இய்யத்துல் உலமா
பௌத்த தேரர்களில் சிலர் முஸ்லிம்கள் மீது குரோத மனப்பான்மையைக் கொண்டுள்ளனர். இனவாதத்தையே பேசுகிறார்கள். முஸ்லிம்கள் எப்போதும் பெரும்பான்மை மக்களுடன் சகோதர உறவினை விரும்புபவர்கள். உங்களுக்கு பௌத்த தேரர்களுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.
எனவே, நீங்கள் பௌத்த தேரர்கள் சிலர் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள குரோத மனப்பான்மையை களைவதற்கு உதவ வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ கடந்த திங்கட்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலயத்திற்கு வருகை தந்தார். உலமா சபைத் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
முஸ்லிம் சமூகம் இன்று பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. சட்டமும் ஒழுங்கும் நாட்டில் நிலைநாட்டப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தைப் பற்றி சிலர் தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். இவை தடை செய்யப்படவேண்டும். முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுடையவர்கள். எமது தாயகம் இதுவே என உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிடம் தெரிவித்தார்.
முஸ்லிம்கள், பொதுபலசேனாவை இயக்கியவன் நான் என்றும் அந்த அமைப்புக்கு ஆதரவாளன் நான் என்றும் தவறான கருத்தைக்கொண்டிருக்கிறார்கள். அந்த அமைப்புக்கும் எனக்கும் தொடர்புகள் இருக்கவில்லை. பொதுபலசேனா அமைப்பு காலியில் தனது அலுவலகமொன்றின் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனாலே நான் அந்நிகழ்வில் கலந்து கொண்டேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தினார்.
உலமா சபையின் பிரதிநிதிகள் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயம் உட்பட அரசியல் நிலைமைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், வெளிநாட்டு பிரமுகர்கள், துறைசார் நிபுணர்கள் என அனைவரையும் எப்போதும் வரவேற்கிறது. கோத்தாபய ராஜபக் ஷ எம்மைச் சந்திக்க விரும்பினார். அழைத்தோம். சந்திப்பு சிநேகபூர்வமாகவே அமைந்தது என ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
-Vidivelli
The directionless ACJU is trying to invite unnecessary trouble.
ReplyDeleteIt is good
ReplyDeleteSuper long term thinking.
ReplyDeleteWe have no other choice!!
ALHAMDULILLAH.
ReplyDelete"THE MUSLIM VOICE" PREDICTED THIS MOVE ALREADY AND PUBLISHED MANY COMMENTS ABOUT WHAT THE ACJU AND THE DECEPTIVE MUSLIM POLITICAL LEADERS AND POLITICIANS WILL DO, Insha Allah. TO GAIN THE FAVOUR OF THE POTENTIAL PRESIDENT OF SRI LANKA IN 2020, GOTABAYA RAJAPAKSA.
"THE MUSLIM VOICE" WAS RIGHT ONCE AGAIN, ALHAMDULILLAH.
Noor Nizam.
Convener - "The Muslim Voice".
Timely move towards benefit of our community. Chances much more for him to lead the country
ReplyDeleteThis is best time to explain problems our community face .
Better to have a discussion with educationist political leaders . Political difference s shoud not harm this process
சந்திபை வரவேற்கலாம். முக்கியமற்ற நபர்களுடன் கலந்துரயாடுதை விடவும் முக்கியமான சிங்களமக்களின் அபிமானம்முடய தற்காலத்திற்கும் எதிர்காலதிற்கும் மிகப் ஏற்றமுடய ஒரு நபருடன் கலந்துரயாடுவதில் தவறில்லை கையாலாகாதவர்களுடன் காலத்தை வீணடிப்பதில் இனியும் அர்த்தமில்லை.
ReplyDeleteGood session.
ReplyDeleteநாடு வாழப் பொறுத்தமில்லாதது என நாட்டைவிட்டுப் பாய்ந்தோடு வௌிநாட்டில் தஞ்சம்புகுந்து இந்த நாட்டின் முஸ்லிம்களின் எதிரிகளுக்கு வக்காளத்துவாங்கும் முஸ்லிம் பெயரில் இங்கு பெரிய ஆட்கள் என்ற நினைப்பில் கருத்துத் தெரிவித்து புகழ்தேட முனையும் புல்லுருவிகள் பற்றி முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இந்த சமுதாயத்தைக் கேட்கிறேன்.
ReplyDeleteஎனக்கென்ரால் கோட்டா கூட்டு சரியாபடல்ல.
ReplyDeleteGood decision , right move ? It's sad to see our Muslims seek refuge from a non Muslim than Allah!
ReplyDeleteMay Allah guide us all.
Mashaa Allah This is a very good job done by ACJU.
ReplyDelete