Header Ads



விமான நிலையத்துக்கு 3 மணிநேரத்துக்கு முன் வாருங்கள்

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவிருக்கும் பயணிகள், தாங்கள் விமான நிலையத்திலிருந்து புறப்படும் நேரத்துக்கு, மூன்றுமணி நேரத்துக்கு முன்னர், விமான நிலையத்து வருகைதருமாறு, ஸ்ரீ லங்கன் விமானச் சேவை அறிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலைச்செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த விமானச் சேவை அறிவித்துள்ளது.

மீண்டும் அறிவிக்கும் வரையிலும், மூன்றுமணி நேரத்துக்கு முன்னமே, விமான நிலையத்துக்கு வருகைதருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலர்களே இவ்வாறு சட்டப்படி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.