Header Ads



தேசிய ஒற்றுமை சீர் குலைவது, நாட்டின் எதிர் காலத்திற்கு பாதகமாக அமையும்

நாட்டில் தேசிய ஒற்றுமை சீர்குலைத்தால் நாடு  அதாள பாதாலத்தை நோக்கிச் செல்வதை தடுக்க முடியாது போகும் என மல்வத்தை மகாநாயக்கத் தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் மலைவர் அனுரகுமார திசாநாயக்கா  மல்வத்தை தேரரைச் சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மல்வத்தை மகாநாயக்கத் தேரர் தேலும் தெரிவித்ததாவது-

நாட்டின் அமைதியற்ற நிலைக்கு எமது நாட்டிலுள்ள அரசியல் வேறுபாடுகளும் முக்கிய காரணமாக உள்ளது.

தேசிய ஒற்றுமை சீர் குலைவது நாட்டின் எதிர் காலத்திற்கு பாரிய அளவில் பாதகமாக அமையும். அப்படியான நிலையிலிருந்து நாட்டைப்பாதுகாப்பது சகல தரப்பினரதும் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனுரகுமார திஸ்ஸாநாயக்க அதன் பின் மல்வத்தை அனுநாயக்கத் தேரர் திம்புல் கும்புரே விமலதம்ம நாஹிமியையும் சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.

அதன் போது பௌத்த மக்களைப் பாதுகாப்பதாயின் மோதல்களை தவிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. if you control your monk group automatically will be under control

    ReplyDelete

Powered by Blogger.