பள்ளிவாசலை நொறுக்கி, முஸ்லிம்களை விரட்டுவோம் - அம்பாறையில் இன்றும், இனவாதிகள் எச்சரிக்கை
-AAM. Anzir-
அம்பாறை நகரில் வாழும் சில முஸ்லிம் குடும்பங்களுக்கு இன்று புதன்கிழமை (28) ஆம் திகதியும் பௌத்தசிங்கள இனவாதிகளினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை சட்டத்தரணி முகைமீன் காலித் jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்
முஸ்லிம்களின் சில வீடுகளுக்குச் சென்றுள்ள பௌத்தசிங்கள இனவாதிகளே, இவ்வாறு "சிங்களவர் எவரையாவது பொலிசார் கைது செய்தால், அம்பாறை பள்ளிவாசலை நொறுக்கி, அங்குள்ள முஸ்லிம்களை விரட்டுவோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment