Header Ads



இலங்கை வரும், மிகப்பெரிய முஸ்லிம் நாட்டின் தலைவர்


சிங்கப்பூர் பிரதமர் லீ ஷ்சியன் லூங்க் (lee hsien loong) மற்றும் இந்தோநேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடொ (Joko Widodo) அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வரவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து எதிர்வரும் 25ஆம் திகதி இந்தோநேசியா ஜனாதிபதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.

இதன்போது அவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.