Header Ads



"அதிபரை மண்டியிடச்செய்த, முதலமைச்சரை பதவி நீக்கு"

ஊவா மாகாண முதலமைச்சரால் பதுளையிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவர் மண்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டிய அதேவேளை, கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த பாடசாலை அதிபர்,மண்டியிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக நேற்றைய தினம் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.