குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாப்பு பெற, பிரதமர் கவசம் பெற்றுள்ளார் - ரவி
முறி மோசடி தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாப்பு பெற பிரதமர் கவசம் ஒன்றை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
முறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியினரிடையே பிளவுகள் ஏற்படவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி தமது அதிகாரத்தை பயன்படுத்தி ராஜபக்ஷக்களை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு ஆரம்பித்த பயணத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவே தமது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment