Header Ads



தவளை பிடிக்கச் சென்ற சிறுவன், மலசலகூட குழியில் விழுந்து மரணம்

குளியாபிடிய பிரதேசத்தில் மலசலகூடத்திற்காக வெட்டப்பட்ட குழியொன்றில் விழுந்து 4 வயது சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.

சதிஷ் கிஹான் விஜேசிங்க என்ற சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் குழியில் விழுந்துள்ள சந்தர்ப்பத்தில் அவரின் தந்தை தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் , அவரின் தாய் ஆடைகளை சலவை செய்ய சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , தந்தை வீடு திரும்பி மகனை தேடியுள்ள நிலையில், வீட்டின் அருகில் இருந்த மலசலகூட குழியில் உயிரிழந்த நிலையில் குறித்த சிறுவன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தவளை பிடிப்பதற்காக தான் மலசல கூட குழிக்கு செல்வதாக குறித்த சிறுவன் அயல் வீட்டு குழந்தைகளிடம் தெரிவித்துள்ளர்.

இந்த மலசல கூட குழியை மூடாமல் வைத்திருந்தமையே இந்த மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை குளியாபிடிய மருத்துவமனையில் இன்று இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.