Header Ads



தென்கொரியாவில் ஜனாதிபதி மைத்திரிக்கு, இப்படியும் நடந்தது


மைத்திரிபால சிறிசேனவும், தென்கொரிய அதிபர் மூன் ஜா-இன்னும் நேற்று எதிர்பாராத வகையில் திடீரெனச் சந்தித்தனர்.

தென்கொரிய அதிபரின் அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் பயணமாக நேற்றுக்காலை சியோலைச் சென்றடைந்தார்.

தென்கொரிய அதிபரை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவும், அவர் அளிக்கும் இராப்போசன விருந்தில் பங்கேற்கவும் சிறிலங்கா அதிபர் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் சிறிலங்கா அதிபர் நேற்று சியோலில் உள்ள யொக்யெச பௌத்த ஆலயத்தில் வழிபாடு செய்ய சென்றிருந்தார்.

அங்கு வந்திருந்த தென்கொரிய அதிபர், சிறிலங்கா அதிபரை எதிர்பாராத முறையில் வரவேற்றார்.

இதையடுத்து இரு தலைவர்களும் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டதுடன் பௌத்த பிக்குகளுடனும் கலந்துரையாடினர்.


No comments

Powered by Blogger.