Header Ads



விஜயதாஸ விவகாரத்தில், அவசரம் வேண்டாம் - ரணில்

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கும் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பற்றி எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை கலந்துபேசி முடிவொன்றை எடுப்போம்.

அதுவரை அவசரப்படாமல் இருங்கள் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் பற்றி கலந்து பேசி முடிவொன்றை எடுக்கலாம் .

அதுவரை உறுப்பினர்கள் தங்களது விமர்சனங்களையும் கண்டனங்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது தனித்தனியாக விமர்சனம் செய்வதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.

நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய அரசின் ஒரு பிரதான தூணாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இத்தகைய சம்பவங்களின் போது அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. AFTER RAVI KARUNANAYAKE, NOW YOU ARE ALL ARE CHASING BEHIND Dr. WIJEYDASA – MINISTER OF JUSTICE AND BUDDHA SASANA ( A PATRIOT) WITH STUPID ALLEGATIONS. WHAT ABOUT THE OTHER CABINET MINISTERS AGAINST WHOM SUBSTANTIATIVE CORRUPTION COMPLAINTS HAVE BEEN MADE? TWO OF THE MOST WANTED MINISTERS FOR SUCH CORRUPTION ARE, A MINORITY COMMUNITY POLITICAL PARTY LEADER FROM THE NORTH WHO IS ALLEGED TO HAVE SWINDLED MILLIONS OF RUPEES IN TRADE DEALS AND PAYMENTS FROM THE ROAD DEVELOPMENT AUTHORITY AND THE OTHER IS A MINISTER WHO IS A CLOSE ASSOCIATE OF DR. NEVILLE FERNANDO. THE PRESIDENT SHOULD BE BOLD ENOUGH TO BRING THEM TO BOOK TOO. IF THE COMPLAINTS AGAINST THEM IS PROBED, MANY EVIDENCES WILL WE REVEALED TO THE CID AND THE PRESIDENTS COMMISSION.
    Noor Nizam - Political Communication Researcher, Former SLFP District Organizer Trincomalee District and Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.