3,500 ரூபா செலுத்தாத கபீர் - வீட்டு நீர் விநியோகம் துண்டிப்பு
கொழும்பு லேன் ட்ரைவில் அமைந்துள்ள அமைச்சர் கபீர் ஹாசிமின் வீட்டின் நீர் கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவித்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் நீர் விநியோகத்தை துண்டித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகத்தை துண்டிப்பதற்காக அதிகாரிகள் அமைச்சரின் வீட்டுக்கு சென்றிருந்த வேளையில் அங்கிருந்த பணியாள் ஒருவர் நீர் கட்டண நிலுவை தொடர்பில் தமக்கு எவ்வித அறிவித்தல்களும் அனுப்பப்படவில்லையென தெரிவித்துள்ளார்.
அதன்போது வீட்டினுள் அலுவல்கள் தொடர்பான கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்த அமைச்சர் கபீர் ஹாசிம், குறித்த ஊழியரை அழைத்து அதிகாரிகள் தெரிவிக்கும் நிலுவைத் தொகையான 3,500 ரூபாவை அவர்களிடம் செலுத்திவிட்டு அதற்கான பற்றுச்சீட்டினை 30 நிமிடங்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
எனினும், 30 நிமிடங்களுக்குள் பற்றுச்சீட்டை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் குழுவின் தலைமையதிகாரி, அமைச்சர் என்பதற்காக தங்களுக்கு அத்தகையதொரு வரப்பிரசாதம் வழங்கப்படவில்லை என தெரிவித்து நீர் விநியோகத்தினை துண்டித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவிக்கையில், அரச ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே எனது கொள்கையாகும் என தெரிவித்தார்.
அத்துடன் தான் அமைச்சர் என்பதை விட ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளராக இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக வாழ்க்கையில் போராடியமைக்கான பாராட்டாக இத்தகைய அரச ஊழியர்களின் செயற்பாடுகளை கருதுவதாக தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சரொருவருக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு கூட அரச ஊழியர்களுக்கு இயலாமல் இருந்தது, எனினும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அரச ஊழியர் மிகவும் சீராக நடத்தப்படுகின்றனர் என்பதற்கு எடுத்துகாட்டாக இந்தவொரு சம்பவம் போதுமானது என தெரிவித்தார்.
எவ்வாறெனினும் இந்த சம்பவத்தினால் அமைச்சர் என்ற ரீதியில் தான் எந்தவொரு அசெளகரியத் துக்கோ, வருத்தத்துக்கோ உள்ளா கியிராத போதிலும் சாதாரண குடி மகனாக இதனை நோக்குமிடத்து வருத்தப் படவேண்டிய சம்பவ மொன்றாக இது உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நீர் விநியோகத்தை துண்டிப்பதற்காக அதிகாரிகள் அமைச்சரின் வீட்டுக்கு சென்றிருந்த வேளையில் அங்கிருந்த பணியாள் ஒருவர் நீர் கட்டண நிலுவை தொடர்பில் தமக்கு எவ்வித அறிவித்தல்களும் அனுப்பப்படவில்லையென தெரிவித்துள்ளார்.
அதன்போது வீட்டினுள் அலுவல்கள் தொடர்பான கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்த அமைச்சர் கபீர் ஹாசிம், குறித்த ஊழியரை அழைத்து அதிகாரிகள் தெரிவிக்கும் நிலுவைத் தொகையான 3,500 ரூபாவை அவர்களிடம் செலுத்திவிட்டு அதற்கான பற்றுச்சீட்டினை 30 நிமிடங்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
எனினும், 30 நிமிடங்களுக்குள் பற்றுச்சீட்டை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் குழுவின் தலைமையதிகாரி, அமைச்சர் என்பதற்காக தங்களுக்கு அத்தகையதொரு வரப்பிரசாதம் வழங்கப்படவில்லை என தெரிவித்து நீர் விநியோகத்தினை துண்டித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவிக்கையில், அரச ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே எனது கொள்கையாகும் என தெரிவித்தார்.
அத்துடன் தான் அமைச்சர் என்பதை விட ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளராக இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக வாழ்க்கையில் போராடியமைக்கான பாராட்டாக இத்தகைய அரச ஊழியர்களின் செயற்பாடுகளை கருதுவதாக தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சரொருவருக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு கூட அரச ஊழியர்களுக்கு இயலாமல் இருந்தது, எனினும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அரச ஊழியர் மிகவும் சீராக நடத்தப்படுகின்றனர் என்பதற்கு எடுத்துகாட்டாக இந்தவொரு சம்பவம் போதுமானது என தெரிவித்தார்.
எவ்வாறெனினும் இந்த சம்பவத்தினால் அமைச்சர் என்ற ரீதியில் தான் எந்தவொரு அசெளகரியத் துக்கோ, வருத்தத்துக்கோ உள்ளா கியிராத போதிலும் சாதாரண குடி மகனாக இதனை நோக்குமிடத்து வருத்தப் படவேண்டிய சம்பவ மொன்றாக இது உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment