கம்பளையில் இருவரை காணவில்லை
கம்பளை பகுதியைச் சேர்ந்த குழந்தை மற்றும் ஆணொருவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டரை வயதான குழந்தை மற்றும் 25 வயதான குழந்தையின் மாமா ஆகியோர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையுடன் சென்ற இளைஞரின் கைத்தொலைபேசி செயலிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று (04) மாலை கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment