Header Ads



'சிங்களவர்களின் பொறுமையைச் சோதிக்காதே'


பதுளை மாநகருக்கு அருகாமையில் சிறுபான்மையினரை அச்சப்படுத்தும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

'சிங்களயாகே இவசீம பரீக்ஸா நொகரனு' என்ற சிங்கள வாக்கியங்கள் அடங்கிய அச்சுப்பிரதிகளே சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டிருந்தன.

பதுளை முத்தியங்கனை ரஜ மஹா விகாரையின் பின்னால் செல்லும் பிரதான வீதி மதிலிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகள் பலரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இந்த செயற்பாடுகள் அனைத்து சிறுபான்மை மக்களையும் அச்சமடைய வைத்துள்ளன.

'சிங்களவர்களின் பொறுமையைச் சோதிக்காதே' என்பது மேற்படி சிங்கள மொழியிலான சுவரொட்டிகளின் தமிழாக்கமாகும்.

No comments

Powered by Blogger.