Header Ads



சப்பாத்து ஜோடி, எனக்குப் பொருத்தமற்றது : மங்கள

இலங்கை அரசியலில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்கள் வகித்த நிதி அமைச்சு பதவியை ஏற்கும்போது தான் அச்சப்பட்டார் என்று புதிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று -23- நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"நிதி அமைச்சு என்ற இந்த பெறுமதிமிக்க சப்பாத்து ஜோடியை என்.எம்.பெரேரா, ஜே.ஆர். ஜயவர்தன போன்ற ஜாம்பவான்கள் வகித்துள்ளனர். இப்படிபட்ட சப்பாத்து ஜோடி எனக்குப் பொறுத்தமற்றது என்றே நினைத்தேன்.

எனினும், 1994 ஆம் ஆண்டு முதல் அமைச்சராக இருக்கின்றேன். எனவே, குறித்த அமைச்சையும் என்னால் செய்யமுடியும் என நம்புகின்றேன்.

என்மீது நம்பிக்கை வைத்து குறித்த பொறுப்பை ஒப்படைத்த ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" - என்றார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மஹிந்த அணி உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன,

"நிதி அமைச்சரின் சப்பாத்து புதிதாகத்தான் இருக்கின்றது. ஆனால், அதன்கீழ்த் துண்டுதான் (சப்பாத்தின் அடிப்பகுதி) தேய்ந்துவிட்டது. ரவி கருணாநாயக்க

அதைப்போட்டுத் தேய்த்துவிட்டார். எனவே, முன்நோக்கிச் செல்வது கடினம்தான்" என்று குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.