Header Ads



3 முஸ்லிம்களை கைதுசெய்தால், ஞான­சாரரர் ஆஜ­ராவார் - சிங்­கள ராவ­ய

-ARA.Fareel-

நாட்டில் இன­வா­தத்தைத் தூண்­டு­பவர், உர­மூட்­டு­பவர் ஞான­சார தேரர் அல்ல. ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்கு முன்பு 3 முஸ்லிம்களை கைது செய்­யுங்கள். ஞான­சார தேரர் தானா­கவே முன்­வந்து ஆஜ­ராவார் என சிங்­கள ராவ­யவின் செய­லாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரி­வித்தார்.

 ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தா­வது 

புதிய சட்­டத்தின் கீழேயே ஞான­சார தேரரை கைது செய்ய முயற்­சிக்­கி­றார்கள் இன்று முஸ்­லிம்­களால் தொல்­பொ­ருட்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன.வன­பி­ர­தே­சங்கள் சைத்­தி­யாக்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன. இவற்­றை­யெல்லாம் பார்க்கும் போது நாம் வேத­னையால் துன்­பத்தால் துடிக்­கிறோம்.

கண்­க­ளி­லி­ருந்து நீர் வழி­கி­றது.ஞான­சார தேரர் ஒரு குற்­ற­வாளி அல்ல.அவர் பௌத்த மதத்­துக்­கா­கவும் பௌத்த நாட்­டுக்­கா­கவும் குரல்­கொ­டுப்­பவர். அவ­ருக்கு ஏதும் ஏற்­பட நாம் விட­மாட்டோம். அவரைக் கைது செய்ய முடி­யாது. அவ்­வாறு கைது செய்தால் எம்­மையும் கைது செய்ய வேண்­டிய நிலைமை உரு­வாகும் அதற்கு மேலும் 1000 சிறைச்­சா­லைகள் அமைக்க வேண்­டி­யேற்­படும்.

எமக்கு ஆயுட்­கால சிறைத்­தண்­டனை வழங்க வேண்­டி­யேற்­படும். எமக்­குப்பின் வரு­ப­வர்­களும் சந்­த­தி­யி­னரும் ஞான­சார தேர­ருக்­காக குரல் கொடுப்­பார்கள்.இன்று பௌத்த தலங்­க­ளுக்கும் தொல்­பொருள் பிர­தே­சங்­க­ளுக்கும் வன­பி­ர­தே­சங்­க­ளுக்கும் ஏற்­பட்­டுள்ள அழி­வு­களை நாம் அனைத்­துக்­கட்சி அர­சியல் தலை­வர்­க­ளி­டமும் பட்­டி­ய­லிட்டுக் கொடுக்­க­வுள்ளோம்.

நாட்டில் இன­வா­தத்தைத் தூண்­டு­பவர், உர­மூட்­டு­பவர் ஞான­சார தேரர் அல்ல. அமைச்­சர்கள் ரிசாத், ரவூப்­ஹக்கீம் மற்றும் அசாத்­சாலி முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், சிவா­ஜி­லிங்கம் விஜ­ய­கலா ஆகி­யோரே இன­வா­தத்தை தூண்­டு­கி­றார்கள். எனவே ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்கு முன்பு இவர்­களை கைது செய்­யுங்கள்.

4 comments:

  1. அஞ்சு பேருக்கு எதுக்குடா 1000 சிறைச்சாலை???

    ReplyDelete
  2. You stop talking rubbish.
    Pls you come and work for our community

    ReplyDelete
  3. நிசார் நிசாம், உன் சுயநலத்திற்காக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்காதே. இந்த சமூகத்திற்காக நீ கிழித்தது என்ன? முதலில் " the Muslim Voice" என்று உனது சுயநல குப்பை எழுத்துக்கு சமுகச்சாயலில் பெயர் வைக்க அனுமதித்தது யார். அடுத்தவர்களை குற்றம் சுமத்தும் உன் கபட கருத்துகளை நிறுத்தி விட்டு ஆக்கபூர்வமான கருத்துகளை சமூகத்திற்காய் எழுத முயற்சி செய்.

    ReplyDelete

Powered by Blogger.