Header Ads



பெற்றோலிய தொழிற்சங்க பணிப் பகிஷ்கரிப்பினால், திருமணத்திலும் தாமதம்..!

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டமையால் வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

இந்த பணி பகிஷ்கரிப்பு காரணமாக மணமகன் ஒருவர் முகூர்த்த நேரத்தை தவறவிடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

திருமணம் இடம்பெறும் இடத்திற்கு செல்வதற்கு வாகனத்தில் போதுமான அளவு எரிபொருள் இல்லாமையினால் அவரால் நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சி செய்திகளில் எரிப்பொருள் வழங்குவதாக கூறப்பட்ட நிலையில் அதனை நம்பியே வந்தோம். எனினும் எரிபொருள் கிடைக்காமையினால் திருமணத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த மணமகன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.