Header Ads



"முஜிபுர் ரஹ்­மானும், மரிக்­காரும் உடன் பதவி விலக வேண்டும்"

-எம்.ஆர்.எம்.வஸீம்-

மீதொட்­ட­முல்ல குப்பை பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து அதன்­மூலம் பாரா­ளு­மன்றம் சென்ற மரிக்கார் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பதவி வில­க­வேண்டும் என ஜன­நா­யக இட­து­சாரி கட்சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்

சோச­லிச மக்கள் முன்­னணி கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ தெ­ரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

மீதொட்­ட­முல்ல குப்பை மேடு சரிவால் பல உயிர்கள் இழக்­கப்­பட்­டுள்­ளன. இன்னும் பலர் காணாமல் போயுள்­ளனர். அத்­துடன் நூற்­றுக்­க­ணக்­கான வீடுகள் அழி­வ­டைந்­துள்­ளன. இந்த பிரச்­சி­னைக்கு தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க ஆட்­சி­யா­ளர்­களால் முடி­யாமல் போனமை மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

அத்­துடன் மீதொட்­ட­முல்ல குப்பை கொட்டும் பிர­தே­சத்தில் குடி­யி­ருப்­ப­வர்­களை அந்த இடத்தில் இருக்­காமல் வேறு பிர­தே­சங்­க­ளுக்கு செல்­லு­மாறு தெரி­வித்தும் இந்த மக்கள் கேட்­க­வில்லை என அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

ஆனால்  இந்தப் பிர­தே­சத்தில் இருக்கும் அனை­வரும் உரித்­து­ரிமை உடை­ய­வர்கள். நாங்கள் குடி­யி­ருக்கும் பிர­தே­சத்தில் குப்­பை­களை ஏன் கொட்­ட­வேண்டும் என அவர்கள் கேட்­கின்­றனர். 

அத்­துடன் இந்த அர­சாங்கம் குப்பை பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுத்­த­ரு­வ­தாக வாக்­கு­றுதி அளித்­தது. இதனை அர­சி­ய­லாக பயன்­ப­டுத்­திக்­கொண்டு பிர­சாரம் செய்த மரிக்கார் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பாரா­ளு­மன்றம் சென்­றனர். ஆனால் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­கா­த­போது அந்த மக்கள் இவர்­க­ளிடம் வந்­த­போது அவர்கள் அனை­வ­ரையும் அலரி மாளி­கைக்கு  அழைத்துச் சென்­றனர்.

அங்கு பிர­தமர் தீர்வை பெற்­றுத்­த­ரு­வ­தாக அவர்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்தார். ஆனால் பிரதமர் சொன்ன பிர­காரம் எதுவும் நடை­பெ­றா­ததால் அவர்கள் மீண்டும் ஆர்ப்­பாட்டம் நடத்­தினர். அதனை பொலி­ஸா­ரைக்­கொண்டு பிர­தமர் அடக்­கினார். கடந்த அர­சாங்க காலத்­திலும் இவ்­வாறே இடம்­பெற்­றது. 

எனவே  இந்த குப்­பையை வைத்து அர­சியல் பிர­சாரம் மேற்கொண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான மரிக்கார் மற்றும் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் இந்த மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாமல் போனமைக்கு அவர்கள்  பதவி விலகியிருக்கவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.