Header Ads



'பயந்து ஓடும் ஜனாதிபதி, தனக்கு முதுகெலும்பு உள்ளதென கூறமுடியாது'

எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று கூறுபவனே முதுகெலும்புள்ளவனாவான். விசாரணைக்கு பயந்து ஓடும்போது தனக்கு முதுகெலும்பு உள்ளது என ஜனாதிபதி கூற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் 1960 ஆண்டு இரண்டு முறை போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட செங்கலடியைச் சேர்ந்த பொ.மாணிக்கவாசகம் அவர்களின் 41வது ஆண்டு நினைவு தினம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது மாவட்ட சபைத் தலைவராக பதவி வகித்த செங்கலடியைச் சேர்ந்த எஸ்.சம்பந்தமூர்த்தி அவர்களின் 28வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) கிளையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.