Header Ads



அக்கா + தங்கை நிர்வாணப் புகைப்படங்களை, பேஸ்புக்கில் பிரசுரிப்பதாகக் கூறி துஷ்பிரயோகம்

பேஸ்புக் மூலம் மூலம் அறிமுகமான அக்காவினதும் தங்கையினதும் நிர்வாணப் புகைப்படங்களை, பேஸ்புக்கில்  பிரசுரிப்பதாகக் கூறி, இருவரையும் துஷ்பிரயோகப்படுத்திய சந்தேகநபர்கள் இருவரை, 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிபதி லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டார். வெல்லம்பிட்டிய வடுகொடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பத்தில் பாதிக்கப்பட்ட யுவதிகள், பொலிஸாருக்கு வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே, சந்தேகநபர் இருவரும் கைதுசெய்யபட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் பாதிகப்பட்ட அக்கா, அவரது பிறந்தநாளுக்கு தந்தை பரிசாக வழங்கிய அலைபேசியில் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து, குறித்த நபருடன் பேசி, பின்னர் அவருக்கு நிர்வாணப் படத்தை அனுப்பியதாகவும். அதனைக் காட்டியே தன்னை துஷ்பிரயோகப்படுத்தியதாக, பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.