Header Ads



இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பலை மீட்க முயற்சி - உச்சக்கட்ட மோதல் ஆரம்பம்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்ட "ஆரிஸ் 13" என்ற, 8 இலங்கையர்களுடன் சென்ற கப்பலை மீட்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த கப்பல் சோமாலியா புன்ட்லான்ட்ஸ் ஆலூலா என்ற இடத்தில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டத்தினை அடுத்து இந்த கப்பலை மீட்கும் முயற்சியில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இதனை மீட்கும் வகையில் தற்போது சோமாலிய கடற்கொள்ளையர்கள் மற்றும் படையினருக்கிடையில் இடையே உக்கிர மோதல் இடம்பெற்று வருவதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சோமாலியா கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்கு ரூபா 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூபா 760 மில்லியன்) கப்பமாக கோரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.