Header Ads



7 வயது சிறுவனின், நெஞ்சை உருக்கும் கடைசி ஆசை

பிரித்தானியாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 7 வயது சிறுவனின் கடைசி ஆசை நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

பிரித்தானியாவின் Essex கவுண்டியை சேர்ந்தவர் Piotr Kwasny (40), இவர் மனைவி Agnieszka (33). Agnieszka கடந்த 2011ஆம் வருடம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்து விட்டார்.

இவர்களுக்கு Filip Kwansy (7) என்னும் மகன் இருக்கிறான். இவனுக்கு இரண்டு வயதிலிருந்தே நரம்பு மண்டலத்தில் கட்டிகள் வளர்ந்து விசித்திர நோய் வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக Filipன் நோய் முற்றியுள்ளதால் அவன் தன் வாழ்நாட்களை மருத்துவமனையில் எண்ணி வருகிறான்.

அவனை இனி காப்பற்ற முடியாது எனவும் அவன் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

இந்நிலையில் சிறுவன் Filip தனது கடைசி ஆசையாக தன் தாயை புதைத்த இடத்திலேயே தன்னையும் புதைக்க வேண்டும் என தன் தந்தையிடம் கோரிக்கை வைத்துள்ளான்.

Filipன் தந்தை Piotr கூறுகையில், என் மகனை நான் புதைக்க வேண்டும் என்று என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.

அவன் தாயை அவரின் சொந்த நாடான போலாந்தில் புதைத்துள்ளோம் என அவர் சோகத்துடன் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.