Header Ads



மன்னர் சல்மான் உயிர் தப்பினார் - 4 ஷிஆக்கள் பிடிபட்டனர், மலேசியா அறிவிப்பு


சவுதி மன்னர் சமீபத்தில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த போது அவரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

சவுதி மன்னர் மலேசியாவிற்கு வருவதற்கு ஒரு மாதம் முன்பு தன்னுடைய படையினர் ஏமனிலிருந்து வந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் உள்பட ஏழு பேரை கைது செய்துள்ளதாக மலேசிய காவல்துறை தலைவர் ஹாலித் அபு பக்கர் தெரிவித்தார்.

சுமார் இரு ஆண்டுகளாக தற்போது வரை ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சவுதி தலைமையிலான கூட்டணிப்படைகள் எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.