Header Ads



பிரபல்ய அரசியல்வாதியின் மகனால், கேளிக்கை விடுதியில் அட்டகாசம் - அறிக்கை கோரும் ரணில்


இலங்கையின் பிரபல்யமான அரசியல்வாதியொருவரின் மகனால், கொழும்பில் உள்ள இரவு கேளிக்கை விடுதியொன்றில் அட்டகாசம் புரியப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில், அந்த இரவு கேளிக்கை விடுதியின் யன்னல் மற்றும் கதவுகளின் கண்ணாடிகள் அடிந்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

சம்பவத்தில், அந்த விடுதியில் கடமையிலிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்துச் சேவைகள் பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இதுதொடர்பில் தனக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. Minister's and their family's r enjoying the life the public whu voted them r suffering.

    ReplyDelete

Powered by Blogger.