ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் - 2 பேர் மரணம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் மீது மேற்கொள்ளப்பட்ட கூரிய ஆயுதத்தாலான தாக்குதல் காரணமாக அக்குடும்பத்தின் இருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குணுகொலபெலஸ்ஸ, முரவெசினே பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, தந்தை (60) மகன் (26) ஆகியோர் உயிரிழந்துள்ளதோடு, தாயும் (52) மற்றுமொரு மகனும் (28) படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கொலை தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, கொலைக்கான காரணம் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, இது குறித்தான் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Post a Comment