Header Ads



ரணில் நாடு திரும்ப, மைத்திரி தாய்லாந்து சென்றார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நியூஸிலாந்து மற்றும் இந்திய விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார். 

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு 10.20 மணியளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.196 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததார். 

கடந்த 29ம் திகதி நியூஸிலாந்து சென்ற பிரதமர் அங்கிருந்து கடந்த 04ம் திகதி இந்தியாவிற்கு சென்றிருந்தார். 

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்தின் பெங்கொக் நகர் நோக்கி சென்றுள்ளார். 

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 07.25 மணிக்கு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 882 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். 

1 comment:

  1. When president back Priminister on foreign tour. So some minister are on foreign holidays all the time. Because each time they on a tour they accompanying ministers and their family. So people pay tax for if

    ReplyDelete

Powered by Blogger.