முஸ்லிம் கிராம மைதானத்தை கைப்பற்ற இனவாதிகள் முயற்சி - ஐ. நா. அலுவலகத்தில் முறைப்பாடு
-விடிவெள்ளி ARA.Fareel-
மும்மானை முஸ்லிம் கிராமத்தில் மைதானம் ஒன்றைக் கைப்பற்றுவதற்கு இனவாத சக்திகள் முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மும்மானை விவகாரத்தை மையப்படுத்தி அப் பகுதி முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்குவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் ஒன்றை தாம் நடைமுறைப்படுத்தி வருவதாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கொரியாவில் வைத்து கூறியிருந்த நிலையிலேயே இந்த விடயம் ஐ.நா.வின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மும்மானை கிராமத்தின் முஸ்லிம் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் தொடர்பான பிரச்சினையில் கிரியுல்ல பொலிஸார் முஸ்லிம் தரப்பில் 9 பேரையும் பெரும்பான்மையினரின் தரப்பில் 7 பேரையும் கடந்த செவ்வாய்க்கிழமை குளியாப்பிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
முஸ்லிம் வித்தியாலயத்தின் தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேரில் வித்தியாலயத்தின் அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் ஐவரும் அடங்குகின்றனர்.
மும்மானை முஸ்லிம் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்துக்குள் கட்டாக்காலி மாடுகள், ஆடுகள் உட்பிரவேசிப்பதை தடுப்பதற்காக அதிபர், வலய கல்வித் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று மைதானத்துக்கு வேலியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது அவ்வூரைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் வேலியை கழற்றி, குழப்பம் விளைவித்தமை தொடர்பில் கிரியுல்ல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து அவ்வூர் பெரும்பான்மை இனத்தவர்கள் ஒருவர் மீது முஸ்லிம்கள் மிளகாய்த் தூள் வீசியது உட்பட மேலும் பல முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்தில் முன்வைத்தனர். இதனையடுத்தே கிரியுல்ல பொலிஸார் குறிப்பிட்ட 16 பேரையும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
வழக்கினை கிரியுல்ல பொலிஸார் சட்டப்பிரிவு 51 இன் கீழேயே தாக்கல் செய்திருந்தனர். பாடசாலை மைதானப் பிரச்சினையை சட்டப்பிரிவு 51 இன் கீழ் தாக்கல் செய்ய முடியாதெனவும் இவ்வாறு தாக்கல் செய்வது மனித உரிமை மீறல் எனவும் பாடசாலை தரப்பில் ஆஜரான RRT சட்டத்தரணிகள் வாதிட்டார்கள்.
குருநாகல் மாவட்டத்தின் கடுகம்பள தேர்தல் தொகுதியில் கிரியுல்ல பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள மும்மானை கிராமத்தின் கனிஷ்ட முஸ்லிம் வித்தியாலயம் 1972 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலைக்கு 1977 ஆம் ஆண்டு பிரதேச தனவந்தர் மார்டின் சிங்ஹோ 1 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
இந்நிலம் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, நில அளவைத் திணைக்களத்தினால் வரைபடமும் பாடசாலைக்கு வழங்கப்பட்டது. இப்பாடசாலையில் 200 முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
பாடசாலையின் மைதானம் தசாப்தகாலமாக பெரும்பான்மை இனத்தின் பெருநாள் தின விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக வலய கல்வி திணைக்களத்தின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வந்துள்ளது.
அண்மைக்காலமாக இப்பாடசாலை மைதானத்தை பெரும்பான்மை இனத்தவர்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இம்மைதானத்தை பொது விளையாட்டு மைதானமாக மாற்றுவதே பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாகும்.
பாடசாலை நிர்வாகமும் முஸ்லிம்களும் இதனை மறுத்ததன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்கும்படி ‘பொது சொத்துக்களை பாதுகாக்கும் மக்கள் அமைப்பு’ எனும் இயக்கம் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டது. முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளில் பெரும்பான்மை இனத்தவர் கொள்வனவு செய்வது தடை செய்யப்பட்டது.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பொதுபலசேனாவே இந்த திட்டத்தை முன்னெடுத்ததாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மும்மானை முஸ்லிம் பாடசாலை மைதானத்தை பெரும்பான்மை இனத்தவர்கள் பயமுறுத்தி அறிவித்தல்கள் வெளியிட்டு கையாள முயல்வது மனித உரிமை மீறல் என RRT அமைப்பு, மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர், முதலமைச்சர் மற்றும் கல்வியமைச்சருக்கு முறையிட்டுள்ளது.
குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். பாடசாலை தரப்பில் ஆர் ஆர் ரி அமைப்பின் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
Take all legal measure ..
ReplyDeleteTake it with top people in poliitcs and with high monks
Do not argue with BBS
May Allah bolster you to attain the justness for the school!
ReplyDeleteராஜபக்ச காலத்தில் UN இலங்கையில் தலையிடுவதை எதிர்த்து முஸ்ஸிம்கள் போராடினார்கள் (ஆணால், போராட்டம் தோல்வி).
ReplyDeleteஆணால், இப்போது சிறு பிரச்சனைகளுக்கும் UN க்கு மனு கொடுக்கிறார்கள்.
ஏன் இந்த திடீர் மாற்றம்?
காணி உறுதியை கச்சேரியில் இருந்து எடுத்து பார்த்தாலே இலகுவாக தெரிந்து விடுமே இது யார் காணி என.
ReplyDeleteஇந்த சின்ன பிரச்சனையைக்கு ஏன் இவ்வளவு build up கொடுக்கிறார்கள்?
Izu panamkotta kaani illa brother...ground matter
ReplyDelete