Header Ads



19 பிடி­வி­றாந்­துகள் பிறப்­பிக்­கப்­பட்ட பேரா­சி­ரியர் கைது

காலி நீதி­மன்­றத்­தினால் நிதி மோசடி உட்­பட 19 பிடி­வி­றாந்­துகள் பிறப்­பிக்­கப்­பட்ட 83 வயது முன்னாள் பேரா­சி­ரியர் ஒரு­வரை கம்­பளைப் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

கம்­பளை ரத்­மல்­க­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த குறித்த பேரா­சி­ரியர் காலி பகு­தியில் நிதி நிறு­வனம் ஒன்றை நடாத்தி அதன் மூலம் பலரை மோசடி செய்­துள்­ள­துடன் மேலும் பல குற்றச் செயல்கள் தொடர்­பாக மேற்­கு­றிப்­பிட்ட பிடி­வி­றாந்து பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கம்­பளை பகு­தியில் தலை­ம­றை­வாக வாழ்ந்து வந்­துள்ளார். 

இந்­நி­லையில் குறித்த நபர் குறித்து காலி பொலிஸார் கம்­பளை பொலி­ஸா­ருக்கு வழங்கிய தகவல் ஒன்­றி­னை­ய­டுத்து கம்­பளை பொலி­ஸா­ரினால் குறித்த நபர் கைது செய்­யப்­பட்டு காலி பொலி­ஸா­ரிடம் ஒப்படைக்கப்ப ட்டதாக கம்பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.