Header Ads



ஆங்சான் சூகியை சந்தித்த, ஜனாதிபதி மைத்திரி

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மியன்மார் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூகியை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

இந்தியா கோவாவில் இடம் பெற்ற பீரிக்ஸ் மாநாட்டில் வைத்தே ஜனாதிபதி ஆங் சான் சூகியை சந்தித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் நேற்று காலை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் வங்காள விரிகுடாவின் பிம்ஸ்டாக் என்ற பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டு என்ற அடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிீரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.