Header Ads



முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு நடந்தபோது, விக்னேஸ்வரன் செவ்வாய்கிரகத்தில் இருந்தாரா..?

வட மாகாண முதலமைச்சர் சிவி. விக்னேஸ்வரன் அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் முஸ்லிம்கள் தமிழ் பேசுவதினால் அவர்கள் தமிழர்கள் என்றும் இஸ்லாம் மதத்தினை தாங்கள் பின்பற்றுவதாக அவர்கள் வித்தியாசப்படுத்தி காட்டுவதானது அரசியல் இலாபங்களுக்காகவே என்ற கருத்துப்பட்ட கூறியுள்ளமையானதை தான் வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த பொறியியலாளர் ஷிப்லி பாரூக்,

முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்பவர் சாதாரன பாமர மகன் அல்ல என்பதனை முதல் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவர் ஒரு நாட்டிலே இருக்கின்ற நீதித்துறையிலே அதியுயர் பதவியினை வகித்த ஒருவர் என்ற அடிப்படையில் இவ்வாறான மோசமான கருத்தினை வெளியிட்டிருப்பது என்பது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பினை தோற்றுவித்துள்ளது. முஸ்லிம்களும், தமிழர்களும் இரண்டு இனம் என்பதனை விக்னேஸ்வரன் முதலில் விளங்கிகொள்ள வேண்டும். தேசியத்தில் இருக்கின்ற சிங்கள இனம், தமிழ் இனம், முஸ்லிம் இனம் என மூன்று இனங்கள் இருக்கின்றது என்பதனை விளங்கிகொள்ளாத விக்னேஸ்வரன் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருப்பது என்பது ஒரு அப்பாவித்தனமான விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

அரசியலுக்கு என்று பேசுகின்ற அதே முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதே அரசியலைதான் செய்வதற்காக பாவித்திருப்பதனை பார்க்கின்ற பொழுது வேடிக்கையாக இருக்கின்றது. அரசியல் செய்வதற்காகவும் வட கிழக்கினை இணைக்க வேண்டும் என்ற தங்களது கோசத்திற்கும் பலம் சேர்க்கின்ற விடயமாகவுமே நாங்கள் இதனை பார்க்கின்றோம். வட கிழக்கினை இணைப்பதனூடாக தனியான சுயாட்சியினை அல்லது சமஷ்ட்டியினை ஏற்படுத்த நினைக்கின்ற விக்னேஸ்வரன் அதற்கு முஸ்லிம்கள் இடையூறாக இருப்பார்கள் என்பதனை சர்வதேசத்திற்கு தெரியாமல் மறைப்பதற்காகவே தமிழர்களும், முஸ்லிம்களும் தமிழ் பேசுவதினால் தமிழர்கள் என்று ஒரு இனத்தினுடைய சின்னத்தினை ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்வதென்பது உண்மையில் அபாண்டமான விடயமாகும்.

ஆனால் முஸ்லிம்களும் தமிழர்கள்தான் என்று கூறுகின்ற விடயத்தினை வைத்து பார்க்கின்ற பொழுது வட மாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று இரண்டு அல்லது மூன்று குடும்பங்களாக வாழுகின்றார்கள். அவர்களை மீண்டும் வட மாகாணத்திற்கு சென்று வாழுவதற்கான காணிபங்கீடுகளை கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை தனது உள்ளத்தில் ஏற்படாத ஒருவர் எவ்வாறு தமிழ் பேசுகின்ற முஸ்லிம்களும் தமிழர்கள் என்று கூற முடியும்?. உண்மையில் சர்வதேசத்திற்கு தமிழ் பேசுகின்ற இரண்டு இனங்களும் தமிழர்களே என சூட்சகமாக காட்டி தன்னுடைய விடயத்தினை சாதிக்க முற்படுகின்ற விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

ஒரு இனத்தினுடைய தலைவராக இருக்கலாம் அல்லது இனத்தினுடைய அரசியல் தலைவராக இருக்கலாம் தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தினை பாதுகாப்பதற்காக இன்னுமொரு சமூகத்தினை முற்று முழுதாக இல்லா தொழிக்கின்ற வகையில் பேசுகின்ற பேச்சென்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஜனநாயகத்தினை மீறுகின்ற செயலாகவே நாங்கள் கருதுகின்றோம். முஸ்லிம்கள் கடுமையாக யுத்தத்தினால் பாதிகப்பட்டிருப்பது ஒரு புறமிருக்க, கடந்த காலங்களிலும் இவ்வாறுதான் தமிழர்கள் முஸ்லிம்கள் என்று இரண்டு பிரிவினர் இல்லை என அவ்வப்போது பேசுவது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை தனித்தரபாக ஏற்றுக்கொள்ள முடியாது என பேசிய அதே கட்சியில் இருக்கின்ற இன்றைய விக்னேஸ்வரன் இன்று தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமிழ் பேசுவதினால் தமிழர்கள் என்று பேசுகின்றார்.

அவ்வாறென்றால் முஸ்லிம்களினுடைய இனச்சுத்திகரிப்பு என்ற ஒரு விடயம் நடை பெற்ற காலத்தில் இவர் எங்கிருந்தார் என்பது எங்களுக்கு ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது. அல்லது இவர் உலகத்தில் இருந்தாரா அல்லது செவ்வாய் கிரகத்தில் இருந்தாரா என்பது அடுத்த கேள்வியாக இருக்கின்றது. ஆகவே இவ்வாறான விடயங்களை கையாளுகின்ற வேலையில் இன ரீதியான சொற்பிரயோகங்களை பிரயோகிக்குமிடத்து மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆட்சி மாற்றத்தின்பொழுது முஸ்லிம்கள் தமிழர்கள் என்ற இரண்டு சமூகங்களும் ஒன்றாக நின்று ஆட்சியினை மாற்றியமைத்துள்ளோம்.

தமிழ் பேசுவதினால் தமிழர்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்லுகின்ற விடயம் கோவில்களுக்கு முஸ்லிம்களும் முஸ்லிம்களின் பள்ளிவாயல்களில் தமிழ் மக்களும் வழி பாட்டில் ஈடுபடுகின்ற நிலைமை உறுவாகும் என்ற நிலைப்பாட்டில் கூறியிறுக்கின்றாரா? என்று என்ன தோன்றுக்கின்றது. ஆகவே இதுவெல்லாம் சிந்தனைக்கு எட்டாத சிந்திக்க தெரியாத ஒருவர் பேசுகின்ற விடயமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே இவ்வாறான கருத்துக்களை உடனடியாக அவர் வாபஸ் பெற வேண்டும். தன்னுடைய அரசியல் சுய இலாபத்திற்காக இன்னுமொரு இனத்தினுடைய தேசிய அடையாளத்தினை ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்கின்ற இந்த முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கூற்றானது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்று நாங்கள் கூறுவது மாத்திரமல்லாமல் அவர் பேசிய விடயத்தினை நாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் தனது மறுப்பறிகையில் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்.

23 comments:

  1. Mr.Sibly Farook

    If you leave from SLMC and make such statement which will be more valuable among the society.

    Your leader still supporting TNA under hidden agenda.

    ReplyDelete
  2. Mr.பாரூக், நீர் என்ன கனவா கண்டனீர்!. முஸ்லிம் இனசுத்திகரிப்பு என்ற ஒன்றும் இதுவரை இலங்கையில் நடக்கவே இல்லையே.

    ReplyDelete
    Replies
    1. எழுக தமிழ் என்பது மறைமுக எழுக கிறிஸ்துவ கோட்பாடு என்பதை பல தமிழர்கள் உணர்ந்துவிட்டனர். ஐரோப்பாவிலும் கனடாவிலும் ராஜ வாழ்க்கை வாழும் நீங்கள் உங்கள் நில பசிக்கு அப்பாவிகளை இரையாக்கும் சுயநலத்தை விட்டு விடாதவரை உங்களுக்கு விடிவு காலம் இல்லை

      Delete
    2. Well said IR Ms ... ஏன் வே..பிள்ளை பிரபாகரனும் அதையேதான் செய்தான்..
      தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உயர்ந்த பதவிகள் ஏழை தமிழ் இந்துக்களுக்கு சயனைட் குப்பிகள்..
      தமிழ் இந்துக்கள் அப்பாவி மடையர்களாகவும் உணர்ச்சி மிக்கவர்பளாக இருப்பதாலும் தான் அவர்களை தமிழ் கிறிஸ்துவர்கள் கில்லுகீரைகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.
      தமிழனுக்கு பேசுறேன் கூறும் சீமானும் ஒரு கிறிஸ்தவன்தான்.

      Delete
    3. இலங்கை தீவு இந்தளவிற்கு இன பிரச்சினைக்கு முகம் கொடுக்க கிருஸ்துவ தீவிரவாதிகளின் பங்கே அதிகம்.இவர்களுக்கென்று தென்னாசியாவில் ஒரு கிருஸ்துவ தேசத்தை கட்டியெழுப்ப இவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் "தமிழ்"
      ஈழம் என்று ஒன்று அமைந்தால் அது ஒரு கிருஸ்துவ தேசமாக தான் அமையும் என்பதற்கு மாற்று கருத்தில்லை

      Delete
    4. தமிழர்களை இந்து என்றும், கீறீஸ்துவர் என்றும் தந்திரமா பிரிக்க பாக்கினமாம். ஹீ,ஹீ

      Delete
  3. கிழக்கில் முஸ்லீம்களுக்கு காணிகொடுத்தனால் படும்பாடு போதும் ஐயா!!

    ReplyDelete
  4. கிழக்கில் முஸ்லீம் ஜீகாத் பயங்கரவாதம்ம தமிழ்கிராமங்களை இனசுத்தீகரிப்பு செய்யும்பபோது நீ நெப்ரீயூனிலா இருந்தாய்..

    ReplyDelete
    Replies
    1. முழு உலகிற்கும் தெரியும் இலங்கையில் தீவிரவாதம் செய்த பன்றிகள்யாரென்று. இலங்கையில் இனவாதம் வளர தமிழ் தீவிரவாதிகளே காரணம் என்பது இன்று விக்கி உருவில் தென்பட்டு விட்டது

      Delete
  5. சகோதரர் சிப்லி பாறுக் அவர்களே எங்கள் இந்த முஸ்லிம் சமுதாயம் சீரான முறையில் வழி நடாத்தப்பட வேண்டிய தேவை இந்த கால கட்டத்தில் மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது எனவே உங்களைப்போன்ற புத்தி ஜீவிகள் மிக அவசரமாக செயல் பட வேண்டிய தேவை ரொம்ப கட்டாயமாக உள்ளது எனவே அடுத்த கட்டமாக முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் அரசியல் ரீதியாக அதை உணர்ந்து அதுக்காக முஸ்லிம்களை தயார் படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தங்களைப்போன்றோரின் பொறுப்பில் உள்ளது.எனவே மிக அவசரமாக சமூகத்தில் கவலை உள்ள நல்ல புத்தி ஜீவிகளை இனம் கண்டு ஒன்று சேர்த்து பேச்சு வார்த்தை செய்து அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.

    ReplyDelete
  6. We can understand that tamils are still with same mentality

    ReplyDelete
  7. Mannar jaffna il iruntha Muslims ku nadanthathu enna...?

    ReplyDelete
  8. Adae Kumar!!!!
    Kilakkil muslimkalukku unga appana kani koduthae; athu muslimkalin poorveeha kanihal.

    Vadakilakku Inaippu is day dream of tamil nation. Sri Lanka has 9 Provinces; not 8.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக எம் அப்பன் தான் கொடுத்தான்

      Delete
  9. Tamilan da comments mokka comments.so nothing to be serious.adi wangiyawarhal appidi than pesuwanuwal

    ReplyDelete
  10. A statement from a former justice like this is shameful. Tamil is not the only language Muslims can speak, rather, they can speak Singhala as well. We, Muslims, do not use religion for political purpose. No need for the merger of North and East, while the past experience still remains in our memory.

    ReplyDelete
  11. இவைகள், கிழக்கில், LTTE கும், ஜிகாத் கும் இடையிலான சண்டை, காட்டிகொடுப்புகளின் விளைவுகள்.
    ஜிகாத்தும் தமிழர்களை கொலை செய்தார்கள்.

    எனினும் இவைகள் இப்போது தேவையில்லாத விடயங்கள். ஏனென்றால்;
    (1) இப்போது LTTE இல்லை.
    (2) LTTE செய்தவைகளுக்கு
    தற்கால தமிழர்களுக்கு சம்மந்தம் இல்லை. ISIS செய்வவைகளுக்கு நீங்கள் பொறுப்பு எடுப்பீர்களா?

    ReplyDelete
  12. Mr Kumar Kumaran !
    Wadakkum Kilakkum Inaippa? Poathunda Shami, Poathum, Koncha kalam inainthu irnthapothu Neengal Seitha Aniyayam Poathatha?
    Wadakku Veru, Kilakku Veru, Kilakku Muslimkaludayatu, Nee Yar Athaipatti Pesa.

    ReplyDelete
    Replies
    1. என்னசார் கிழக்கு முஸ்லீம்களுடையதா.?
      கிழக்கின் நிப்பரப்பு இனஅடிப்படையில்
      தமிழர் 51%
      சிங்களவர் 40%
      முஸ்லீம் 9%

      Delete
    2. Show to your nonsensical statistics to your Racist Vicky.

      Delete
  13. ப்லி பாறுக் அவர்களே எங்கள் இந்த முஸ்லிம் சமுதாயம் சீரான முறையில் வழி நடாத்தப்பட வேண்டிய தேவை இந்த கால கட்டத்தில் மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது எனவே உங்களைப்போன்ற புத்தி ஜீவிகள் மிக அவசரமாக செயல் பட வேண்டிய தேவை ரொம்ப கட்டாயமாக உள்ளது எனவே அடுத்த கட்டமாக முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் அரசியல் ரீதியாக அதை உணர்ந்து அதுக்காக முஸ்லிம்களை தயார் படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தங்களைப்போன்றோரின் பொறுப்பில் உள்ளது.எனவே மிக அவசரமாக சமூகத்தில் கவலை உள்ள நல்ல புத்தி ஜீவிகளை இனம் கண்டு ஒன்று சேர்த்து பேச்சு வார்த்தை செய்து அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.

    ReplyDelete
  14. Ada attathoni.isis enda suma wampukku illukkera

    ReplyDelete
  15. You are a Tamil terrorist.

    ReplyDelete

Powered by Blogger.