Header Ads



இராணுவ வீரரை பாலியல் துஷ்பிரயோகம், செய்த பௌத்த தேரர் கைது


(வீரகேசரி)

பேஸ்புக்கின் ஊடாக அறிமுகமாகிய இராணுவ வீரரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் ,கனகராயகுளம் இராணு முகாமில் சேவை புரிந்து வந்த இராணுவ வீரரே குறித்த தேரரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவரென தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இராணுவ வீரருக்கு பேஸ்புக்கின் ஊடாகவே தேரருடன் நட்பு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கொத்மலை பிரதேசத்தில் மொழி பயிற்சியை பெற்று கொள்வதற்கு குறித்த இராணுவ வீரருக்கு  தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

தேரரின் அழைப்பை ஏற்று இராணுவ வீரர் மாதம்பே பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் இரண்டு நாள் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ வீரர் மொழி பயிற்சி மையத்தில் இருந்த போது திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது வைத்தியர் மேற்கொண்ட பரிசோதனையில் குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தேரர் மாதம்பே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.