Header Ads



உலக இஸ்லாமிய மாநாட்டில் ரணில் - முஸ்லிம் தலைவர்களையும் சந்திக்கிறார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டுநாள் அதிகாரபூர்வ பயணமாக, இன்று -01- இந்தோனேசியாவுக்குப் பயணமாகவுள்ளார்.

ஜகார்த்தாவில் நடைபெறும் 12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்கு, விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரிலேயே சிறிலங்கா பிரதமர் இந்தோனேசியா செல்லவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, நிதி அமைச்சர் சிறிமுல்யானி இந்திரவதி, சமுத்திர செயற்பாடுகள் அமைச்சர் லுகுட் பின்சார் பன்ஜாய்டன் ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுக்களையும் நடத்தவுள்ளார்.

அதேவேளை, உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் பக்க நிகழ்வாக, இந்த மாநாட்டில் பங்கேற்கும், மலேசியப் பிரதமர், பாகிஸ்தான் அதிபர், ஜோன்தார் பிரதிப் பிரதமர் உள்ளிட் டாருடன் பேச்சுக்களை நடத்தவும் சிறிலங்கா பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் உயர்மட்ட அமைச்சர்கள், அதிகாரிகளைக் கொண்டு குழுவொன்றும் இந்தோனேசியா செல்லவுள்ளது.

No comments

Powered by Blogger.