Header Ads



துப்பாக்கியால் சுடப்பட்ட, மூவரின் சடலங்கள் மீட்பு

அநுராதபுரம், திறப்பனை பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (30) பிற்பகல் 3.00 மணியளவில் திறப்பனை, ஹிந்தகொல்ல பாதையில் வைத்தே குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதார் மற்றும் வாகனத்தில் பயணித்தோர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.