LTTE க்கு மீண்டும் இடமளிக்கப்படமாட்டாது - முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் ரணில்
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்த விடயத்தைக் கூறினார்.
எல்.ரி.ரி.ஈ.யினருக்கு மீண்டும் பயங்கரவாதத்தை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார். அதுகுறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment