Header Ads



மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி, பொல்லுகளுடன் சிலர் அலைவு - இராணுவம் குவிப்பு

-TM_

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்றுமுன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த, கூட்டு எதிரணியினரின் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ள ஹைட் மைதான வளாகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில், பொல்லுகளுடன் சிலர் அலைந்து திரிவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே, அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, குறித்த மைதானத்தை அண்டிய பகுதிகளிலுள்ள வீதிகளும் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.