Header Ads



ராஜபக்ஷக்கள் செய்த அநியாயங்கள் - நேற்றிரவு கண்ணீர் விட்டழுத சரத் பொன்சேக்கா

-நஜீப் பின் கபூர்-

07.09.2015 இரவு தனியார் தொலைக் காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பதில் வழங்கும் போது தனக்கும் தனது குடும்பம் மற்றும் பிள்ளைகளுக்கு ராஜபக்ஷக்கள் செய்த அநீயாயங்கள் பற்றிக் குறிப்பிடும்போது பெரும் மன நெகிழ்வுக்கு ஆளாகியதுடன் ஒரு கட்டத்தில் வார்த்தைகளை வெளியிட முடியாது கண்ணீர் வடிக்கத் துவங்கினார். 

அந்த நிகழ்ச்சியில் ராஜபக்ஷாக்களின் நடவடிக்கைகளை அவர் கடுமையாக விமர்சித்ததுடன்  குறிப்பாக கோத்தாபே ராஜபக்ஷவின் நடவடிக்கைகளைக் கடுமையாக சாடினார். போர் வெற்றியை தன்னுடைய வெற்றியாக காட்ட அவர் முற்பட்டார். 

இதற்கு நல்லதொரு உதாரணம்தான் நாங்கள் போர் முடிந்து பத்திரிகையாளர் மா நாடொன்றை நடாத்த ஏற்பாடு செய்திருந்தோம். எங்களுக்குத் தெரியாமல் அவர் அதனை இரத்துச் செய்து விட்டார். இது பற்றி நான் அவரிடம் கேட்ட போது பின்னர் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வைப்போம் என்று கூறி சமாளித்தார். 

இராணுவத்துக்குத் தெரியாமல்  கிழக்கில் சில நடவடிக்கைகளை மேற் கொண்டு அவர் மூக்குடைபட்டார். என்றும் குறிப்பிட்டதுடன் கோத்தா பதவி வெறிபிடித்த ஒரு மனிதன் என்றும் அங்கு குறிப்பிட்டார். 

நிகழ்ச்சியை நடத்திய ஊடகவியலாளர் ஒரு கட்டத்தில் கோத்தாபே உங்களுக்குக் கடன் தர இருப்பதாகச் சொல்லப்படுகின்றதே என்று கேட்டதற்கு ஆம், என்று பதிலளித்ததுடன் கடன் பெற்றுக் கொண்ட விவகாரத்தையும் திருப்பி இதுவரை தராத விடயத்தையும் அங்கு சுட்டிக் காட்டினார். 

மேலும் எக்காரணம் கொண்டும் தான் பாதுகாப்புச் செயலாளர் பதவியை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் இராணுவத்தில் இருந்து தப்பிப ஓடியவர்கள் வைத்திருந்த அந்தப் பதவியை ஏற்பது என்பது ஒரு அவமானமான செயல் என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார். நாட்டுக்கு சேவையாற்றக் கூடிய ஒரு பதவி வந்தால் அது பற்றி யோசிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்hர்.  




2 comments:

  1. Itha election kalathil seyathu irntha nalla irunthu irukkalam nam sings makaluku naatru pattru konjam adigam aduthan no vote for u kaka adakathu kuiluku perumayam yotha vetri unaaku illa Mr Ku

    ReplyDelete
  2. அல்லாஹ் பெரியவன், தன்னோடு இருந்தவர்களின் பதவிகளையும் பட்டங்களையும் பழிவாங்கும் நோக்கோடும், தன்னை மிஞ்சிவிடக்கூடாது என்றும் பறித்தெடுத்தார். அல்லாஹ் அவர் பதவிகளை பறித்தது மட்டுமல்ல, கீழ்நிலைக்கும் தள்ளிவிட்டான்.

    சூழ்சியாளர்களுக்கெல்லாம் சூழ்சியாளன் அல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.