மூன்று பேருக்கு பதுளை, நீதிமன்றத்தினால் மரண தண்டனை
25 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய மூன்று பேருக்கு பதுளை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த தீர்ப்பை நீதிபதி சம்பத் பண்டார, நேற்று வெள்ளிக்கிழமை(28) வழங்கியுள்ளார்.
வெலிமடை -போஹகும்புர பிரதேசத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்குபேர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக குறித்த மூன்று நபர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
1990ஆம் ஜூன் மாதம் 22ஆம் திகதி இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்கள் வெலிமடை- போஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
Post a Comment