Header Ads



ஜனாதிபதி மைத்திரி, மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார் - ராஜித

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஜனாதிபதி துரோகம் இழைக்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கியதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனுக்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.