Header Ads



இலங்கையில் உள்ள ஜெயலலித் சுதந்திரமாக உலாவுகிறார்..!

இலங்கையின் தற்போதைய நிர்வாகம், தமிழ்நாட்டின் தற்போதைய நிலையை ஒத்த நிர்வாகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஊழல் தொடர்பில் ஜெயலலிதா இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் இலங்கையில் உள்ள ஜெயலலித் சுதந்திரமாக திரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது குற்றவாளிகள் குழு ஆட்சி நடத்தி வருகிறது என்று நேற்று தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சில அரசியல்வாதிகள் ஒரு லட்சம் பெறுமதியான சப்பாத்துக்களை அணிகின்றனர். சிலர் முதலை தோல்களால் செய்யப்பட்ட சப்பாத்துக்களை அணிகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.