Header Ads



அமைச்சர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு பல்டி அடிக்கவுள்ளது உண்மையா..?

தேர்தலின் பின்னர் அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மூன்று அமைச்சர்கள் அல்ல கொத்து கொத்தாக அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்கள்.

சில ஆண்டுகளாகவே ஆளும் கட்சி அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மொனராகல மாவட்ட அமைச்சர் ஒருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளார் என ரஞ்சித் பத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மூன்று அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் வெற்றியின் பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உண்மையானவையா என சிங்கள ஊடகமொன்று ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் வினவிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

பல்வேறு அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை கட்டியெழுப்பினோம்.

அரசாங்கத்தை விட்டு செல்லும் அளவிற்கு எனக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.