Header Ads



பேஸ்புக் ஊடாக யுவதியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட இளைஞன் கைது

பேஸ்புக் சமூக வளைத்தினூடாக யுவதி ஒருவரின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட இளைஞன் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஹெலியகொட பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவெல பகுதியை சேர்ந்த 24 வயதான யுவதியுடன் கடந்த ஒருவருடமாக பேஸ்புக் சமூக வளைத்தின் ஊடாக குறித்த இளைஞன் நட்பு கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் காதல் தொடர்பு மேற்கொண்டுள்ளதாகவும் , அதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இளைஞனால் யுவதியின் ஆபாச புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனால் இரண்டு போலி முகப்புத்தக கணக்குகள்  ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யுவதியால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இளஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் தம்புளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது குற்றத்தை ஒப்புக் கொண்டமையால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறித்த இளைஞனுக்கு உத்தரவிபடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.