Header Ads



யாழ்ப்பாணத்தில் சிறுவர்களிடையே ஒருவகை காய்ச்சல்


குழந்தைகள் மற்றும் சிறுவர் மத்தியில் ஒருவகையான காய்ச்சல் பரவுவதால் இதுதொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி க.அருள்மொழி தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கை,கால், வாய்ப்பகுதியில் கொப்பளங்கள் ஏற்படுவதுடன் கடுமையான காய்ச்சலும் ஏற்படுகிறது எனவே இவ்வாறான அறிகுறிகள் தென்படும் போது உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைபெற வேண்டும் எனவும் இல்லையேல் இந்த நோய்த்தொற்று பிள்ளைகளின் இதயத்தை பாதிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.