Header Ads



சுயவிருப்பு கடிதங்களைப் பெற்று இலங்கை வீரர்களை IPL இற்கு அனுப்பிவைக்க முடிவு


(NF)

சுயவிருப்பம் குறிப்பிடப்பட்ட கடிதங்களைப் பெற்று இலங்கை கிரிக்கெட் வீரர்களை IPL போட்டிகளுக்கு அனுப்பிவைக்கத் தீர்மானித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வீரர்களை IPL போட்டிகளில் களமிறக்குவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் வீரர்களைக் களமிறக்காதிருக்கவும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், ஏனைய மாநிலங்களில் நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை வீரர்களை அனுப்பிவைக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய, இலங்கை வீரர்களின் பாதுகாப்பிற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உத்தரவாதமளிக்க வேண்டும் எனவும், உத்தரவாதம் கிடைத்தவுடன் வீரர்களின் விருப்பம் குறிப்பிடப்பட்ட கடிதங்களைப் பெற்று அவர்களை இந்தியாவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.