Header Ads



ஹலால் சின்னம் பதிக்காத பொருட்களை புறக்கணிப்போம்...!



(ஏக்கூப் பைஸல்) 

''கோழைகள் அபிப்பிராயங்களைக் கண்டு நடுங்குகிறார்கள், முட்டாள்கள் அவற்றை எதிர்க்கிறார்கள், புத்திசாலிகள் அவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்கள், திறமைசாலிகள் தங்களுக்கு சாதகமாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்''

பன்றி அனைத்துண்ணி விலங்காகும். இவ் இனத்தில் 12 இனங்கள் உள்ளன. இறைச்சிக்காகவும், தோலுக்காவும், செல்லப் பிராணியாகவும்  பன்றியினை வளக்கப்படுகிறது , இவ் விலங்குக்கு  வியர்வை சுரப்பிகள் இல்லை இதனால் சேற்றைப் பூசிக் கொள்வதன் மூலம் தனது உடளைக் குளிரச் செய்கிறது. இதன் கர்ப்ப காலம் 4 மாதங்கள் ஆகும். குறைந்த கர்ப்பகாலத்தில் கூடிய குட்டிகளை ஈன்றுகின்றது. இதன் காரணமாக அனைத்து உணவுப் பொருட்களிலும் பன்றியின் கொழுப்புபைப்யன்படுத்தி வருகின்றார்கள். தோலினை பதப்படுத்தி ஆண்கள் , பெண்கள் பாவிக்கும் பைகளுக்கும் ஏனைய ஆடைகளுக்கும் பயன்படுத்துகின்றார்கள். இவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்கள் திறந்த சந்தையில் இலாபகரமாக பெறக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது .

இலங்கையில் பன்றி வளப்பு மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில்  பிரதானமாக வளர்க்கப்படுகின்றது.தற்போது பன்றியின் சனத்தொகை 80,000  ஆகவும் வருடாந்த பன்றியிறைச்சி உற்பத்தி 9500 மெ.தொன் ஆகவும் காணப்படுவதால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பன்றியிறைச்சி 1   வீதத்த்தினைச் செலுத்துகிறது. இதன் காரணமாக அரசாங்கம் பன்றி வளர்ப்பினை அதிகரித்து உணவுப் பொருட்கள் , ஆடைகள்,  பைகள் , செருப்புகள் தயாரிக்கின்ற நிருவனங்களுக்கு பன்றியின் பதப்படுத்திய அனைத்துப் பொருட்களையும்  சந்தைப்படுத்த தயாராகியது. எனினும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழுகின்ற இந் நாட்டில் செயற்படுத்துவதற்கு தடையாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஹலால் சின்ன பிரிவு இருக்கும் என நினைத்த அரசாங்கம் ஹலால் சின்னத்தினை தடுப்பதற்கு ஏவி விடப்பட்ட தீய சக்திகள்தான் ஹலால்  பொருட்களுக்கான தடையை  விதிக்க காரணமாகியது.

அல்குர் ஆன் ஹராமான உணவுகளைப் பற்றி ' தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்' அத்தியாயம் 02. வசனம் 173 ) உணவில் ஹலால் சின்னம் இல்லாத பொருட்களை குறிப்பிடப்படவில்லை என வாதிடும் எமது சமயத்தவர்களும், அன்னிய சமயத்தவர்களும் குறிப்பிடுகின்ற போது கவலையை ஏற்படுத்துகின்றது. 

இஸ்லாமியர்களை அல்லாஹ் தடுத்தவற்றை  ஏதாவது ஒரு முறைகளை கையாண்டு தினிப்பதற்கு திறந்த சந்தையில் இஸ்லாம் தடுத்துள்ள பன்றியை பதப்படுத்தி  அனைத்து உணவுகளையும்  தயாரிக்கின்றார்கள.; இந்த நிலையினை கட்டுப்படுத்த 65 ற்கும் மேற்பட்ட பெரும்பான்மையினருக்கு  கீழ் வாழும் முஸ்லிம் நாடுகளுக்கும் இன் நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யும் ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கும் ஹலாலான  உணவினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உணவினை ஆய்வுக்கு உற்படுத்தி  ஹலால் சின்னத்தினை  பொதியுறைகளில் பதிக்கும்.  முறை தோற்றம் பெற்று பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.  ஆனால் இலங்கையில் இம் முறையை  தடுப்பதற்கு மேற்கத்திய நாடுகளால்  ஒரு குழுவினரை ஏவி விடப்பட்டு ஹலால் சின்னம் தடுக்கப்பட்டது.

இஸ்லாம் பன்றி இறைச்சியையும் அதனை பதப்படுத்திப் செய்யும் உணவுகளையும் மற்றும் அனைத்துப் பொருட்களையும் ஏன் ஹராமாக்கி இருக்கின்றது என்று ஆராய்கின்றபோது  மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவித உணவுகளையும் இறைவன் அனுமதிப்பதில்லை என்பது ஆய்வுகளின் மூலம் அறியமுடிகின்றது. 

பன்றி  இறைச்சியை உண்பதனால் மனிதனுக்கு 70 விதமான நோய்கள் உண்டாகின்றது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு வட்டப்புழு (Roundworm ) ஊசிப்புழு (Pinworm ) கொக்கிப்புழு (Hookworm ) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. 

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurassis)  என்ற பெயரையுடைய குடற்புழு காணப்படுகின்றது. இதனால்  இறைச்சியை நன்றாக வேக வைத்தாலும் இப் புழுக்கள் இறப்பதில்லை. இப்படி இருக்கின்ற பன்றியினை பதப்படுத்தியும், அதன் கொழுப்பினையும் பயன்படுத்தி உணவுகளில் கலப்படம் செய்து முஸ்லிம்களை இறைவனுக்கு மாறு செய்யும் கூட்டமாக உருவாக்க முயற்சிக்கும் அன்னிய சக்திகளுக்கு எமது இளைய தலைமுறைகளும், எதிர்கால தலைமுறைகளும்  துணை போகாது வாழ நாங்கள் வழி வகுப்போம். ஹலால் சின்னம் பதிக்காத பொருட்களை புறக்கணிப்போம். 

' ஹலால் சின்னம் பதித்த பொருட்கள் முஸ்லிம் இனத்துக்கு மற்றும் சிறந்ததல்ல உலகில் வாழும் அனைத்து  இனத்துக்கும் சிறந்தது ' 

6 comments:

  1. நான் உங்கள் கருத்துக்கு தயாரகிவிட்டேன் இன் வாங்க மாட்டேன்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ். தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும்இ பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – வெட்கம் அகன்றுவிடுதல்இ தீய எண்ணங்களை உருவாகிவிடுதல்இ வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது

    ReplyDelete
  4. porumaiudan thavaiyai purindhu idainchal illamal Allhkku etramadhiri nadanthu kollawum. Koli venduma irachi vendum enga vangaNUM EPPADI VANGANUM sollathevai illai. ok

    ReplyDelete

Powered by Blogger.