Header Ads



அநுரகுமார போகமாட்டார் - விஜித ஹேரத் பறக்கிறார்


எதிர்வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொள்ள மாட்டார்.


அதற்கு பதிலாக இலங்கையின் சார்பில் அமைச்சர் மட்டத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


இதன்படி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கையைத் பிரதிநிதித்துவப்படுத்தி, செப்டம்பர் 28 அன்று நாட்டின் உரையை தாம் நிகழ்த்தவுள்ளதாக விஜித ஹேரத் கூறியுள்ளார்.


இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் 26 அன்று நியூயோர்க் புறப்பட உள்ளார்.

No comments

Powered by Blogger.