மகிந்தவிடம் தஞ்சமடைந்த வீரவன்ச, கம்மன்பில
கம்பஹா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
"அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டுவதாகக் கூறிக்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அநுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்தினார்கள். அந்த மேடையில் சகல ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் ராஜபக்சர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மகிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாசாரம் இதுவேயாகும்.
இவர்கள் எப்போதுமே சந்தர்ப்பவாத அரசியலில்தான் ஈடுபடுவார்கள். கடந்த காலங்களில் இவர்கள் தமது சுயநல தேவைகளுக்காகவே அரசியல் செய்தனர். தற்போது தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment