(DIG) பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ள ஷானி அபேசேகர
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராகப் பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இந்தப் பதவி உயர்வு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பின்னோக்கித் திகதியிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதவி உயர்வு நடைமுறையை அங்கீகரிக்கும் வகையில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஷானி அபேசேகரவை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஷானி அபேசேகர தற்போது (CID) பணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

Post a Comment