ஈரான் மீதான இறுதிநேர, தாக்குதல் நிறுத்தப்பட்டது ஏன்..?
சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், டொனால்ட் டிரம்பை தொலைபேசியில் அழைத்து, நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், ஈரானின் உள்கட்டமைப்பைக் குறிவைத்து மற்றொரு சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்க வேண்டாம் என்றும் கூறியதாக அமெரிக்க சிபிஎஸ் Tv தகவல் வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பது மற்றும் ஈரானின் அணு அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய ஒப்பந்த நிபந்தனைகள் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, பிராந்திய நாடுகளின் கோரிக்கைக்கு இணங்க, தாக்குதல் இடைநிறுத்தப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.

Post a Comment