புதிய படுகொலையில் ஒரு குடும்பத்தின் விடைபெறல்...
ஒரு தந்தை, ஒரு தாய் மற்றும் அவர்களது குழந்தை... காசா - கான் யூனிஸில் நடந்த புதிய படுகொலையில் ஒரு முழு குடும்பத்தின் விடைபெறல்.
கான் யூனிஸ் சுற்றுப்புறங்களை குறிவைத்து ஆக்கிரமிப்புப் இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தந்தை, தாய் மற்றும் அவர்களது குழந்தையின் உடல்கள் இன்று (2) நல்லடக்கம் செய்யப்பட்டன.
இந்த புதிய படுகொலை ஒரு முழு குடும்பத்தின் உயிரைப் பறித்துள்ளது. காசா பகுதியின் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களிடையே உயிரிழப்புகள் ஏற்படுவதும், மனிதாபிமான சூழல் மேலும் மோசமடைவதும் தொடர்கிறது.

Post a Comment