Header Ads



அரசாங்கம் சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியை ஸ்தாபிக்க முற்பட்டு வருகின்றது - சஜித்


நாட்டில் நிலவி காணப்படும் கடுமையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், அரசாங்கம் சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியை ஸ்தாபிக்க முற்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


கிரிந்த மீன்பிடித் துறைமுகப் பிரதேசத்தில் வாழும் மீனவர்களின்  இவ்வாறு தெரிவித்தார். 


தற்போதைய ஆளும் தரப்பின் பல அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் மேடைகளில் ஏறி "இப்போது சுகமா, இப்ப நல்லமா ? என்று கேள்வி எழுப்பிய எழுப்பினர். அதேபோன்று, இன்று மக்கள் தாம் எதிர்பார்த்த வழமான நாடும் அழகான வாழ்க்கையும் உருவாக்கப்பட்டுள்ளதா என்று தங்களைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றன. விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு, தொழில்முனைவோருக்கு, உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமும், கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமுமே வளமான நாடும் அழகான வாழ்க்கையும் உருவாகும். மாறாக, நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதன் மூலம் அது சாத்தியமாகாது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மக்களின் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.