என்ன தண்டனை வழங்கியிருப்பார்..?
முகம்மது நபி அவர்கள் இந்த உலகத்தில் இன்று இருந்திருந்தால், அனோஜன் என்ற வாலிபனுக்கு என்ன தண்டனை வழங்கியிருப்பார்..? என்னுடைய கருத்து மன்னித்து அரவணைத்து அவன் கண்ணீரைத் துடைத்து ஆழ்ந்த கருத்துக்களை கலந்துரையாடல் செய்திருப்பார். அப்படி ஒரு மகான் முஹம்மது நபி அவர்கள். (ராகுல தேரர்)
இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்பவர் சவுதியில் தொழில் புரிந்துவந்த நிலையில் தனது முகநூலில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை வெளியிட்டமைக்காக சவுதி அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment